search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்காதலன் தற்கொலை"

    திருவட்டார் அருகே கள்ளக்காதலன் ஆசிட் வீசியதால் பலத்த காயமடைந்த விதவை பெண் மீது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    திருவட்டார்:

    குமரி மேற்கு மாவட்டம் திருவட்டாரை அடுத்த ஏற்றக்கோடு பரையன் கோணத்து விளையை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கிரிஜா (வயது 36). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    கிரிஜாவின் கணவர் மணிகண்டன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். 9 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டன் இறந்து போனார். இதனால் கிரிஜா, தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்தார்.

    கிரிஜாவின் கணவர் வெளிநாட்டில் இருந்த போது, அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜான் ரோஸ் என்பவருடன் கிரிஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போதே இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு சென்று வந்தனர்.

    கணவர் இறந்த பின்பு, கிரிஜாவுக்கு, ஜான் ரோஸ் மிகவும் உதவியாக இருந்தார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் ஜான் ரோஸ் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கிரிஜாவிடம் கூறினார்.

    அதற்கு கிரிஜா, குழந்தைகள் இருவரும் வளர்ந்து விட்டனர். அவர்கள் பெண் குழந்தைகள் என்பதால், இனி நான் திருமணம் செய்து கொள்வது சரியாக இருக்காது. உறவினர்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று கூறினார். திருமணத்திற்கும் மறுத்து விட்டார்.

    கிரிஜா மீதான மோகத்தில் இருந்த ஜான் ரோசுக்கு அவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் அடிக்கடி கிரிஜாவை சந்தித்து திருமண ஆசையை நிறைவேற்றும்படி தொந்தரவு கொடுத்தார். இதில் வெறுப்படைந்த கிரிஜா, சில மாதங்களுக்கு முன்பு ஜான் ரோஸ் பற்றி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியதோடு, ஜான் ரோசையும் எச்சரித்து அனுப்பினர்.

    போலீசாரின் எச்சரிக்கைக்கு பிறகு சில நாட்கள் கிரிஜாவை சந்திக்காமல் இருந்த ஜான் ரோஸ் நேற்று முன்தினம் கிரிஜாவை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு குழந்தைகளும் இருந்தனர். அவர்களோடு ஜான் ரோஸ் பேசிக்கொண்டிருந்தார்.

    குழந்தைகள் வெளியே சென்ற பின்பு, தனியாக இருந்த கிரிஜாவிடம் , ஜான் ரோஸ் மீண்டும் திருமண பேச்சை எடுத்தார். இதை கேட்டதும் எரிச்சலடைந்த கிரிஜா, ஜான் ரோசை திட்டியதோடு, அவரை வெளியே போகும்படி எச்சரித்தார். இதில் ஆத்திரம் அடைந்த ஜான் ரோஸ், ஏற்கனவே மறைத்து எடுத்து வந்திருந்த ஆசிட்டை கிரிஜா மீது வீசினார்.

    கிரிஜாவின் முகம், மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் ஆசிட் பட்டு எரிந்தது. கிரிஜா வலியால் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் ஜான் ரோஸ் அங்கிருந்து தப்பியோடினார்.

    அக்கம் பக்கத்தினர் கிரிஜாவை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிரிஜாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள்.

    இதற்கிடையே கிரிஜா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிய ஜான் ரோஸ் அருகில் உள்ள தோப்புக்கு சென்றார். அங்கு அவர் வி‌ஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற போலீசார் ஜான் ரோசின் உடலை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஜான் ரோஸ் உடல் பிரேத பரிசோதனை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது.

    தற்கொலை செய்த ஜான் ரோஸ் உடல் கிடந்த இடத்தில் அவர் தற்கொலைக்கு பயன்படுத்திய பொருள்கள் கிடந்தன. அவற்றை போலீசார் கண்டெடுத்தனர்.

    அதே நேரம் ஜான் ரோஸ் பயன்படுத்திய செல்போனை காணவில்லை. அது மாயமாகி இருந்தது. அந்த செல்போனில் அவரும், கிரிஜாவும் எடுத்து கொண்ட பல்வேறு படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அவர்கள் இருவருக்கும் இடையிலான பழக்கம் தொடர்பான பல தகவல்களையும் அதில் ஜான் ரோஸ் பதிவு செய்து வைத்திருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்து உள்ளனர். எனவே அந்த செல்போனை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக திருவட்டார் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கிரிஜா கொடுத்த புகாரின் பேரில் ஜான் ரோஸ் மீது வழக்கு பதிவாகி உள்ளது.

    ஜான் ரோசின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவட்டார் அருகே திருமணத்துக்கு வற்புறுத்தி பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவட்டார்:

    திருவட்டார் அருகே உள்ள ஏற்றக்கோடு வியன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கிரிஜா (வயது 39). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    மணிகண்டன் வெளிநாட்டில் வேலை பார்த்தபோது அவரது மனைவி கிரிஜாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான ஜான்ரோஸ் (29) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

    இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த மணிகண்டன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சொந்த ஊருக்கு வந்தார். இங்கு அவர் திடீரென மரணம் அடைந்தார்.

    அதன் பிறகும் கிரிஜாவுக்கும், ஜான் ரோசுக்கும் இடையேயான கள்ளத்தொடர்பு நீடித்தது. கணவர் இறந்து விட்டதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கிரிஜாவை ஜான்ரோஸ் வற்புறுத்தினார். ஆனால் தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதால் அவர்கள் நலனுக்காக தான் 2-வது திருமணம் செய்ய விரும்பவில்லை என கிரிஜா தெரிவித்தார்.

    ஆனால் ஜான்ரோஸ் திருமணத்துக்கு தொடர்ந்து வற்புறுத்தி கிரிஜாவிடம் தகராறில் ஈடுபட்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தகராறு முற்றியதில் ஜான்ரோஸ், கிரிஜாவை சரமாரியாக தாக்கினார். இதுதொடர்பாக கிரிஜா திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் ஜான்ரோஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த பிரச்சினைக்கு பிறகு சில காலம் கிரிஜாவை ஜான்ரோஸ் சந்திக்காமல் இருந்தார். கடந்த சில நாட்களாக மீண்டும் கிரிஜாவை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். கிரிஜா மீண்டும் மறுப்பு தெரிவிக்கவே அவர் மீது ஜான்ரோஸ் ஆத்திரம் கொண்டார்.

    நேற்று இரவு கிரிஜா தனது குழந்தைகளுடன் பக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது மறைந்திருந்த ஜான்ரோஸ், ரப்பர் பால் உறைய வைக்க பயன்படுத்தப்படும் ஆசிட்டை எடுத்து கிரிஜாவின் முகத்தில் வீசினார். இதில் கிரிஜாவின் முகம் கருகி வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். இதையடுத்து ஜான்ரோஸ் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    கிரிஜாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் கிரிஜாவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆசிட் வீசியதில் கிரிஜாவின் 2 கண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிட் வீசிய ஜான்ரோசை தேடினர். அப்போது அவர் அங்குள்ள தோட்டம் ஒன்றில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜான்ரோஸ் இறந்தார். திருமணத்துக்கு வற்புறுத்தி பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனம் உடைந்த அந்த பெண்ணின் கள்ளக்காதலனும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே வள்ளிநாயகபுரம் காட்டுப்பகுதியில் வேப்பமரம் ஒன்றில் வாலிபர் ஒருவரது பிணம் தூக்கில் தொங்கியது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த வாலிபரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில், தூக்கில் பிணமாக தொங்கியது அங்குள்ள காற்றாலை நிறுவனம் ஒன்றில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த முருகராஜ் (வயது 20) என்பது தெரியவந்தது. முருகராஜின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கன்டிகைப்பேரியாகும். இவர், புதியம்புத்தூரில் தங்கி இருந்து காற்றாலை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    மேலும் முருகராஜ், வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

    கன்டிகைப்பேரியில் உள்ள செங்கல் சூளையில் நெல்லை மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். அந்த பெண்ணுக்கும், முருகராஜிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது.

    இருவரும் ரகசியமாக சந்தித்து கள்ளக்காதலை வளர்ந்து வந்ததாக தெரிகிறது. இந்த விவரம் அரசல் புரசலாக அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே, மனைவியை கண்டித்தார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிய வரவே முருகராஜ், புதியம்புத்தூருக்கு வேலைக்கு வந்தார். அதன்பிறகும் அந்த பெண்ணுடன், முருகராஜ் செல்போனில் அடிக்கடி பேசி வந்தார். அந்த பெண்ணும் பெரும்பாலான நேரங்களில் முருகராஜிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

    இந்த விவரம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. அவர், மீண்டும் மனைவியை கண்டித்தார். தனது கள்ளக்காதலனுடன் பேச முடியவில்லையே என்று மனம் உடைந்த அந்த பெண் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை அறிந்த முருகராஜ் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். இதற்கிடையே நேற்று முன்தினம் புதியம்புத்தூர் வள்ளிநாயகிபுரம் காட்டுப்பகுதியில் வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இந்த விவரம் போலீசார் விசாரணையில் வெளியானது. முருகராஜ் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    திண்டுக்கல் லாட்ஜில் கள்ளக்காதலியை கழுத்து அறுத்து கொன்று காதலன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே நிலக்கோட்டை கொங்கர்குளத்தை சேர்ந்தவர் பிரசாந்த்(வயது27). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். அதேபகுதியை சேர்ந்த நாகராஜ் மனைவி பாலாம்பிகா(25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. பிரசாந்துக்கும் பாலாம்பிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த விசயம் தெரியவரவே ஊர்பெரியவர்கள் இருவரையும் கண்டித்து அறிவுரை வழங்கினர். இருந்தபோதும் கள்ளக்காதல் ஜோடி தனிமையில் சந்தித்து வந்ததுள்ளனர்.

    கடந்த 10-ந்தேதி வீட்டைவிட்டு வெளியேறிய ஜோடி திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள லாட்ஜில் அறைஎடுத்து தங்கியுள்ளனர். இருவரும் அங்கே உல்லாசம் அனுபவித்துள்ளனர். அதன்பின்பு பிரசாந்துக்கும், பாலாம்பிகாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தனது கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி பிரசாந்த் தான் வைத்திருந்த கத்தியால் காதலி பாலாம்பிகா கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல் அறுத்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    பின்னர் அதிர்ச்சியுடன் எப்படியும் தன்னை போலீசார் பிடித்து விடுவார்கள் என்று கருதிய பிரசாந்த் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி ஏற்கனவே வாங்கிவந்த வி‌ஷத்தை குடித்து தற்கொலை செய்தார்.

    அறைக்கதவு கடந்த 2 நாட்களாக பூட்டியே கிடந்ததால் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே விடுதி ஊழியர்கள் அறை கதவு தட்டியும் திறக்கப்படவில்லை.

    எனவே திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அறைகதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    அப்போது படுக்கையில் வாயில் நுரைதள்ளியபடி பிரசாந்த் இறந்துகிடந்துள்ளார். பாலாம்பிகா கழிவறையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×